Mar 1, 2010

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா !

ஒன்பதரை மணி காலேஜிக்கு


ஒவ்வொருத்தனா கெளம்பும் போது


ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்


ஒன்பது இருபது ஆகுற வரைக்கும் .. .





அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ


அரை குறையா குளிச்சதுண்டு


பத்து நிமிஷ பந்தயத்துல


பட படன்னு சாப்டதுண்டு





பதட்டதோட சாப்பிட்டாலும்


பந்தயத்துல தோத்ததில்ல ,


லேட்டா வர்ற நண்பனுக்கு


பார்சல் மட்டும் மறந்ததில்ல !





விறுவிறுன்னு நடந்து வந்து


காலேஜ் Gate நெருங்குறப்போ


' வெறுப்படிக்கிதுடா மச்சான் ' னு


ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா ,


வேற எதுவும் யோசிக்காம


வேகவேகமா திரும்பிடுவோம்


வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க ,


இல்ல ' வெற்றி ' தியேட்டர்ல படம் பாக்க !





' கஷ்டப்பட்டு ' காலேஜிக்கு போனா


கடங்கார professor கழுத்தறுப்பான் .. .


assignment எழுதாத பாவத்துக்கு


நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான் !





கேலி கிண்டல் பஞ்சமில்ல ,


கூத்து கும்மாள குறையுமில்ல ,


எல்லாருக்கும் சேத்துதான் punishment ன்னா


H.O.D ய கூட விட்டதில்ல !





ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா


அத அடிப்பான் காபி அந்தபக்கம் ...


ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து


ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு !





பசியில யாரும் தவிச்சதில்ல


காரணம் - தவிக்க விட்டதில்ல .. .


டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்


சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல !





அம்மா ஆசையா போட்ட செயினும்


மாமா முறையா போட்ட மோதிரமும்


fees கட்ட முடியாத நண்பனுக்காக


அடகு கடை படியேற அழுததில்ல ...





சட்டைய மாத்தி போட்டுக்குவோம்


சாதி சமயம் பாத்ததில்ல ,


மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்


முகவரி என்னன்னு கேட்டதில்ல !





படிச்சாலும் படிக்கலன்னாலும்


பிரிச்சி வச்சி பாத்ததில்ல .. .


அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்


அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல !





வேல தேடி அலையுறப்போ


வேதனைய பாத்துப்புட்டோம்


' வெட்டி ஆபிஸர் ' னு நெஜமாவே


மாறி மாறி சிரிச்சிகிட்டோம் !





ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு


ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ


மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல


கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும் .. .


பக்குவமா இத கண்டும் காணாம


நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ


' சாப்பாட்ல காரம்டா மச்சான் ' னு


சமாளிச்சி எழுந்து போவோம் .. .





நாட்கள் நகர ,


வருஷங்கள் ஓடுது ,


எப்போதாவது மட்டுந்தான் இ - மெயிலும் வருகுது


"Hi da machan... how are you?" வுன்னு .. .





தங்கச்சி கல்யாணம் ,


தம்பி காலேஜி ,


அக்காவோட சீமந்தம் ,


அம்மாவோட ஆஸ்த்துமா ,


personal loan interest,


housing loan EMI,


share market சருக்கல் ,


appraisal டென்ஷன் ,


இந்த கொடுமையெல்லாம் பத்தா


' இன்னிக்காவது பேச மாட்டாளா ?' ன்னு


இஞ்சிமறப்பா போல ஒரு காதல் ,


.


.


.


எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா ,


நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா !





இ - மெயில் இருந்தாலும்


இண்டர்னெட் இருந்தாலும்


கம்பெனியில ஓசி phone இருந்தாலும்


கையில calling card இருந்தாலும்


நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல


நண்பனோட குரல கேக்க


நெனச்சாலும் முடியறதில்ல


பழையபடி வாழ்ந்து பாக்க !





அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்


orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்


'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்


' ஏண்டா பேசல ?' ன்னு கோச்சிக்க தெரியல . .


இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல !




தேசம் கடந்து போனாலும்


பாசம் மறந்து போகாது !


பேசக் கூட மறந்தாலும்


வாசம் மாறி போகாது !


வருஷம் பல கழிஞ்சாலும்


வரவேற்பு குறையாது !


வசதி வாய்ப்பு வந்தாலும்


' மாமா ' ' மச்சான் ' மாறாது !

No comments:

search

AdBrite